கொரோனா எதிரொலி: தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்!

தமிழக அரசு வரும் மே 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கினை அறிவித்துள்ளது. அவற்றில், பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2020 மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா எதிரொலி: தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்!

இந்நிலையில், தமிழக அரசு வரும் மே 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கினை அறிவித்துள்ளது. அவற்றில், பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு

நாடு முழுவதும் ஊரடங்கு

கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2020 மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து துறைகளும் முடக்கப்பட்டன. இதில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் அடங்கும். தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆன்லைன் வழியில் வகுப்புகள்

ஆன்லைன் வழியில் வகுப்புகள்

முழு ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியிலான வகுப்புகளை மத்திய அரசு வலியுறுத்தியதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வுகளும் நடைபெற்றன.

தமிழக மாணவர்கள் குசி!

தமிழக மாணவர்கள் குசி!

தொடர்ந்து, கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் கடுமையாக இருந்ததினால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.

ஊரடங்கில் தளர்வுகள்

ஊரடங்கில் தளர்வுகள்

இதனிடையே, கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு சார்ந்தவை என அனைத்தும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் திறக்கப்பட்டன.

பள்ளிகள் மீண்டும் திறப்பு

பள்ளிகள் மீண்டும் திறப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. இதர வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் நடைபெற்றது. இதனிடையே, கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மீண்டும் அதிகரித்த கொரோனா

மீண்டும் அதிகரித்த கொரோனா

இந்த நிலையில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதி வேகமாக அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் மக்கள் மத்தியில் நோய்த் தொற்று குறித்த மாபெறும் அச்சம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு

இதனிடையே, கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சமீபத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 4 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

இரவு நேர ஊரடங்கு நேரத்தில் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொழுது போக்கு தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தவிர பிற வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

அரசு அலுவலகங்களுக்கு கட்டுப்பாடு

அரசு அலுவலகங்களுக்கு கட்டுப்பாடு

இதனிடையே, தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தரப்பில் இருந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சமாக 50 சதசிகித பணியாளர்களை மட்டுமே கொண்டு இயங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

மேலும், தமிழகத்தில் பள்ளித் தரப்பிலேயே அதிகப்படியான கொரோனா பரவியதைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Corona Lockdown: Schools and colleges will remain Closed in Tamilnadu
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X