தமிழகத்தில் புதிய பாடத்திட்டங்கள் 3 முதல் 10 வரை கணினி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றப்படாமல் பழைய நிலையில் உள்ளது .
தமிழத்தில் பழையநிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது . பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் அவர்கள் மேற்ப்பார்வையில் பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றப்பட திட்டமிட்டுள்ளது . பாடப்புத்தகங்கள் மாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது சில சிறப்பு தகவலகள் மற்றும் தரமான பாடப்புத்தகங்கள் உருவாக்கி மாணவர்களை அறிவு தேடல் நோக்கி கொண்டு செல்ல அரசின் கல்வி செயலாளர் உதயசந்திரன் அவர்கள் திறம்பட மேற்ப்பார்வையில் கவனித்து வருகிறார் .
சார்ந்த பதிவுகள்:
புதிய பாடத்திட்டம் உருவாக்க கல்வியாளர்களுக்கு பள்ளி கல்வித்துறை அழைப்பு
தமிழகத்தில் கணினி பாடத்திட்டம் :
தமிழகத்தில் கணினி பாடத்திட்டம் மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது . கணினி பாடத்திட்டத்தை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன இது உருவாக்கப்பட்டுள்ளது . மேலும் மாணவர்கள் தங்கள் சுய சிந்தனையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் இப்பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது . கணினி பாடத்தை அறிவியல் பாடத்துடன் வழங்கலாமா அல்லது தகவல் தொழில்நுட்ப பாடமாக வழங்கலாமா என்றும் யோசனையில் உள்ளனர்.
மேலும் புதியப்பாடத்திட்டத்தினை சிறப்பாக நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மாணவர்களை திறம்பட வழிநடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது .
பொதுமக்கள் கருத்து :
நவம்பர் மாததில் பாடத்திட்டங்கள் உருவாக்குவது குறித்து அதனை முன்னோட்டம் பார்க்கவும் பாடத்திட்டங்கள் மாற்றுவது ஆகியவற்றுடன் பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் அரசு திட்டமிட்டுள்ளது . அதன்படியே மாற்றங்கள் எதுவும் தேவைப்படின் அதற்கும் அரசு தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது .
சார்ந்த தகவல்கள் :
தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி வெகுவிரைவில் முடிவடையும்
அடடே!!,, இமேஜ் மேங்கில் பாடங்களை கற்கபோகும் தமிழகப் பள்ளி மாணவர்கள் !!!