மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மூலம் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை ஒரே ஆவணமாக வழங்க உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

சிபிஎஸ்சி மட்டுமின்றி அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான மதிப்பெண் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் தனித் தனியாக வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்போதைய கல்வி ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மற்றும் கல்விச் சான்றிதழை ஒரே ஆவணத்தில் வழங்கவும், 12-ம் வகுப்புக்கு வழக்கம் போல மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழை தனித் தனியாக வழங்கவும் முடிவு செய்திருப்பதாக சிபிஎஸ்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்தான முடிவுகளை சிபிஎஸ்இ தேர்வுக் குழு எடுத்துள்ளது. மேலும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆட்சிக் குழுவும் சிபிஎஸ்சி-யின் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications












