சென்னை: சிட்டி அண்ட் இன்டஸ்டிரியல் டெவலப்மெண்ட் கார்ப்பொரேஷன் ஆஃப் மகாராஷ்டிரா(சிட்கோ) நிறுவனத்தில் அசிஸ்டண்ட் எந்ஜினீயர், ஜூனியர் பிளானர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்கலுக்கு ஜனவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அசிஸ்டண்ட் என்ஜினீயர்(சிவில், எலக்ட்ரிக்கல், டெலிகாம்), ஜூனியர் பிளானர், அக்கவுண்டன்ட், ஃபீல்டு ஆபீஸர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு சிட்கோவின் இணையதளத்துக்குச் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் புகைப்படம், கையெழுத்தையும் அப்லோட் செய்யவேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும். ஓபிசி, எஸ்பிசி, எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.150 வசூலிக்கப்படும். விண்ணப்பங்கள் ஜனவரி 28-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு http://www.cidco.maharashtra.gov.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
சிட்கோ நிறுவனமானது மகாராஷ்டிர அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. நகர்ப்புறத் திட்ட ஒழுங்கு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை கவனிக்கிறது சிட்கோ. 1970-ல் நிறுவப்பட்டதாகும் இது.