சித்திரகலா ஓவியப்போட்டி பங்கேற்க ஓடி வாங்க குழந்தைகளே !!

சித்திரகலா ஓவியப்போட்டியில் பங்கேற்க மாணவர்களே வாருங்கள்

By Sobana

கேரியர் இந்தியா கல்வித்தளம் நடத்தும் குழந்தைகள் தினச்சிறப்பு போட்டியாக ஒவியப்போட்டியில் பங்கேற்க மாணவர்களே உங்களுக்கான அருமையான வாய்ப்பு .

சித்திரகலா ஒவியப்போடியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

கேரியர் இந்தியா கல்வித்தளம் :

குழந்தைகளே சுட்டி குழந்தைகளே கேரியர் இந்தியா கல்வித்தளம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கல்வி சமபந்தப்பட்ட தகவலகள் , மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற தகவல்கள் அத்துடன் வேலை வாய்ப்பு , நுழைவு தேர்வு , அகில இந்திய கல்வி செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் அறிவிக்கின்றது .

குழந்தைகள் தின கொண்டாட்டம் :

குழந்தைகள் தினமான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மாணவர்களுக்கு ஒவியப்போட்டியை " சித்திரகலா " என்ற தலைப்பில் கேரியர் இந்தியா தளம் நடத்துகிறது . இந்திய அளவில் நடக்கும் இப்போட்டியில் மாணவர்கள் பங்குகொள்ளலாம் .

குழந்தைகள்தினத்தை முன்னிட்டு நடக்கும் ஒவியப்போட்டியின் முடிவானது நவம்பர் 14 ஆம் நாள் அறிவிக்கப்படும் . சித்திரகலா ஒவியப்போட்டியில் பங்கு பெற விருப்பமா குழந்தைகளே மாணவர்களே உங்களுக்கான அறிவிப்புக்கள்

சித்திரகலா ஒவியப்போடியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

போட்டியின் பெயர் : சித்திரகலா

போட்டியின் தொடக்கம் : இப்போதே தொடங்குங்கள்

பங்கேற்பாளர் : சித்திரகலாவில் பங்கேற்க 6 முதல் 17 வயது வரையுள்ளோர் பங்கேற்கலாம்

சித்திரகலா ஓவியப் போட்டியின் தலைப்பு :

சித்திரகலா ஓவியப் போட்டியின் தலைப்பானது குழந்தைகளின் வயதுகேற்ப மாறுபடும்

4 வயது முதல் 7 வரை ( நானும் எனது நட்பும்)
8 வயது முதல் 10 வரை ( எனது விருப்ப விளையாட்டு பகுதி)
11 வயது முதல் 13 வரை ( எனது கனவு)
14 வயது முதல் 17 வரை (எனது நகரம் )

சித்திரகலாவில் பங்கேற்க மாணவர்கள் தங்களது ஓவியப்படைப்புகளை அனுப்ப எங்களின் அதிகாரபூர்வ தளத்தில் [email protected] பதிவு செய்ய வேண்டும்

விதிமுறைகள் :

மாணவர்கள் உங்களது பள்ளி மற்றும் இல்ல முகவரி சரியாக எழுதியிருக்க வேண்டும் . விவரங்கள் சரியாக இல்லையெனில் உங்களது படைப்புகள் நிராகரிக்கப்படும்

மாணவர்கள் உங்களது படைப்புகளில் மேல் சித்திரகலா என்ற தலைப்பின் கீழ் உங்கள் வயதுகேற்ற கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை பின்ப்பற்றி ஓவியம் தீட்டப்பட்டிருக்க வேண்டும் .

வரையப்பட்ட ஓவியங்களை சிறப்பான தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் .

மாணவர்களின் சொந்தப்படைப்பாக இருக்க வேண்டும் . நாங்கள் உங்களின் படைப்பாற்றலை அங்கிகரிக்கின்றோம் நீங்களும் உங்களது படைப்பாற்றலை திறம்பட வெளிப்படுத்துங்கள் . பெற்றோர்களே நீங்களும் உங்களது மழலை அரும்புகளுக்கு உதவுங்கள் .

மாணவர்களின் படைப்பாற்றைலை அனுப்பும் பொழுது சித்திரகலா என்ற தலைப்பின் கீழ் சிறப்பான ஓவிய புகைப்படத்தை எடுத்து இமெயிலில் அனுப்ப வேண்டும் .

காலக்கெடு :

மாணவர்கள் தங்கள் படைப்பை அனுப்ப இறுதி தேதி நவம்பர் 8 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் . நவம்பர் 14 ஆம் நாள் சித்திரகலா ஒவியப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும் .

பரிசு :

வெற்றி பெறும் சிறப்பான ஓவியங்கள் எங்கள் கேரியர் இந்தியா தளத்தில் உலா வரும் அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றி சான்றிதழ் அளிக்கப்படும் .

ஓடிவிளையாடு பாப்பா ,
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ,
கூடி விளையாடு பாப்பா
எங்கள் சித்திரகலா கூடத்தில் பங்கேற்க வா பாப்பா

இப்படிக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களுடன் உங்கள் கேரியர் இந்தியா !!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about Chitrakala competition for students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X