சென்னை: மத்திய ஆயுதப் பாதுகாப்புப்படையில் (சிஆர்பிஎஃப்) எஸ்ஐ, ஏஎஸ்ஐ உள்ளிட்ட ஏராளமான பணியிடங்கள் காத்திருக்கின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
எஸ்ஐ பணியிடங்கள் 28-ம், ஏஎஸ்ஐ பணியிடங்கள் 63-ம், ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள் 12-ம், கான்ஸ்டபிள் பணியிடங்கள் 70 என மொத்தம் 182 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தபால் மூலம் மார்ச் 23-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம் போன்ற விவரங்களுக்கு http://crpf.nic.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வயது 21 முதல் 27-க்குள் இருக்கவேண்டும்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் சிஆர்பிஎஃப் இணையதளத்தில் வெளியிடப்படும்.
நாட்டின் மிகப்பெரிய மத்திய பாதுகாப்பு ஆயுதப் படையாக சிஆர்பிஎஃப் உள்ளது குறிப்பிடத்தக்கது.