சென்னை:இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியா சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் போகஜானிலுள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் இந்த பணிவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
டர்னர் போன்ற பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பத்தைத் தயார் செய்து சாதாரண அஞ்சலில் The HOD (P&A), Cement Corporation of India Limited, Rajban Cement Factory, P.O. Rajban Cement Factory, Tehsil: Paonta Sahib, Dist: Sirmour (HP)-173028 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 25-க்குள் அனுப்பவேண்டும். தபாலின் மேல் உறையில் Application for Artisan Trainee (Tech) ------ Discipline" என எழுதியிருக்கவேண்டும்.