சென்னை: இந்திய சிமெண்ட் கார்ப்பொரேஷன் நிறுவனத்தில்(சிசிஐ)ஃ ஜூனியர் ஆபீஸர் உள்ளிட்ட பணியிடங்கள் காத்திருக்கின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய சிமெண்ட் கார்ப்பொரேஷன் நிறுவனம் மத்திய அரசு நிறுவனமாகும். டெல்லியில்1965-ல் நிறுவப்பட்டது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. பல்வேறு வகையான சிமெண்ட் வகைகளை இது உற்பத்தி செய்து வருகிறது.
ஜூனியர் ஆபீஸர் பணியிடங்களில் (கிரேட்2) 2 காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். மேலும் அக்கவுன்ட்ஸ், ஃபைனான்சியல், காஸ்ட் அக்கவுன்ட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் 2 ஆண்டு அனுபவம் இருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு.
பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை the HOD (P&A), Cement Corporation of India Limited, Bokajan Cement Factory, P.O. Bokajan Cement Factory, Dist. Karbi Anglong (Assam) Pin- 782490 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.