சென்னை: சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்காக நரேந்திரமோடி மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்ப்டுள்ளது.
குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள் இந்த மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்துகொள்ளுமாறு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் தங்களது அனுபவங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போனின் பிளேஸ்டோரில் 'Narendra Modi mobile app' என்று டைப் செய்தால் மோடியின் மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த மொபைல் செயலி மூலம் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும் இந்த மொபைல் ஆப் மூலம் தனது அனுபவங்களையும் பிரதமர் பகிர்ந்துகொள்வார் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மொபைல் ஆப்-ஐ அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் டவுன்லோடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் ரேடியோவில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போதும் பிரதமர் இதைத் தெரிவித்தார்.