புதுடெல்லி : சுமார் 11 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதிய சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 24-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 2-ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவ மாணவியர்கள் கீழே உள்ள இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
www.cbse.nic.in,
www.cbseresults.nic.in
மேலும், கூகுள் ப்ளேஸ்டோரில் சிபிஎஸ்இ ரிசல்ட்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை சுமார் 11 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். 10ம் வகுப்புத் தேர்வினை சுமார் 9 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர்.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் முடிவு நாளை காலை வெளியாகும். 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 2ந்தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.