சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரிய உதவும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) முடிவுகள் இன்று வெளியாகின்றன.
சிடிஇடி 2015-க்கான தேர்வுகள் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 959 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்காக வெளிநாடுகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சுமார் 7.5 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வுக்காக 1,600 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவர்.
மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா, என்விஎஸ், மத்திய திபெத்திய பள்ளிகளில் உள்ள பணியிடத்தில் பணியமர்த்தப்படுவர். அதுமட்டுமல்லாமல் சண்டீகர், தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி, டாமன் அண்ட் டையூ, அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, டெல்லி என்சிடி பள்ளிகளிலும் பணியமர்த்தப்படுவர்.
இந்தத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் இன்று வெளியாகிறது. தேர்வு பதிவெண்களை இணையதளத்தில் டைப் செய்து முடிவுகளை அறியலாம்.
தேர்வு முடிவுகளைக் காண http://cbse.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.