சென்னை: சிபிஎஸ்இ புத்தகங்கள், படிப்புக்கான ஆதாரங்களை ஆன்-லைனில் இலவசமாகப் பெற முடியும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில் ஆன்-லைனில் இலவச புத்தகங்களை வெளியிட முடிவு செய்திருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார்.
சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் உள்ள அனைத்து புத்தகங்களை ஆன்-லைனில் இலவசமாகக் கிடைக்கும். மேலும் மொபைலிலும் இதைப் பெறலாம். இதற்கான ஆப்ஸ்களும் தயாராகி வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: என்சிஇஆர்டி புத்தகங்கள் அனைத்து ஆன்-லைனில் இலவசமாகக் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. மின்னணு ஆட்சியகத்தின் முயற்சியின் விளைவாக இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கல்விக்கு உதவும் அனைத்து மெட்டீரியல்கள், வீடியோக்கள் இலவசமாக ஆன்-லைனில் பெற முடியும்.
மேலும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை மாணவர்களுடன் கலந்துரையாடச் செய்வதற்காக பால் சபா(சிறார் கூட்டம்) நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலவசப் புத்தகங்களை டவுன்லோடு செய்ய E-pathshala இணையதளத்துக்குச் செல்லலாம் என்றார் அவர்.