கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமம் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று எவ்வித முன் அறிவிப்பும் இன்றி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெயிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் வகுப்பு தேர்வும், மார்ச் மாதம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெற்றது.
இதனிடையே, கொரோனா ஊரடங்கின் காரணமாக சில தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்னதாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சில தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ 12ம் வகுப்பில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு மற்றும் செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என கடந்த மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில், சிபிஎஸ்இ 12 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 13) இணையதளத்தில் வெளியானது.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, results.nic.in அல்லது cbse.nic.in என்ற இணையதளங்களில் மூலம் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.