டெல்லி: மத்திய அரசின் விசாரணை அமைப்பான சிபிஐ-யில் பணிபுரிவதற்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இங்கு 74 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். சம்பளம் ரூ.40,000 என்ற அடிப்படையில் வழங்கப்படவேண்டும்.
இந்தப் பணியில் சேர இந்தியராக இருத்தல் அவசியம். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://cbi.nic.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களுடன் தகுந்த ஆவணங்களை இணைத்து ஏப்ரல் 6-ம் தேதிக்குள் Government of India, Central Bureau of Investigation, 5-B, 7th Floor, A& B-wing CGO Complex, Lodi Road, New Delhi- 110003 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.