யூபிஎஸ்சியின் கிடுக்குபிடி தேர்வு மையங்களில் குழ்றபிடிகள்
யூபிஎஸ்சி தேர்வு நாடு முழுவதும் ஆறு லட்சத்திற்கு மேல் தேர்வு எழுதுவோர்கள் தேர்வெழுதினர் . இத்தேர்வில் யூபிஎஸ்சி தேர்வு எழுதுவோர்க்கு செம கிடுக்கு பிடி நடவடிக்கையால் தேர்வு எழுதியோர் பாதிக்கப்பட்டனர் . தேர்வு அறைக்குள் எந்தவொரு மின் சாதனமும் அனுமதியில்லை. தேர்வறையில் செல்வதற்கு முன்பு காவல் துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களை நடத்துவதைப் போல் தேர்வு எழுதும் ஆண் பெண்களை பரிசோதித்தனர் .
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோர்கள் பள்ளி மாணவர்கள் அல்ல, தேர்வு அறையில் தேர்வு எழுதுவோர்க்கு கேள்வி நுணுக்கம் பிடிப்பட நேரமெடுக்கும் அப்படியிருக்க எவ்வாறு மின் சாதனங்களை கேள்வி அறியாமல் பயன்ப்டுத்துவர்.
யூபிஎஸ்சி தேர்வு அறையில் தேர்வு கண்காணிப்பாளர்களான ஆசிரியர்கள் சிலர் சரியாக தேர்வு எழுதுவோர்க்குரிய வரிசை முறையில் கேள்வித்தாளை கொடுக்க தவறியுள்ளனர் ஆதலால் குழப்பம் நிலவியுள்ளது , தேர்வறையில் நடந்த குழப்பத்தால் தேர்வு எழுதியோர்க்கிடையே மன குழப்பம் ஏற்ப்பட்டது . தேர்வு மையங்களில் உள்ள ஆசிரியர்கள் பொருப்புணர்வுடன் செயல்பட வேண்டும் . நிறைய தேர்வு மையங்களில் மொபைல் போன் வைத்திருப்போர்கள் அனுமதிக்க தாமதமானது . யூபிஎஸ்சி தேர்வை பொருத்தமட்டில் வேறுவேறு ஊர்களை சேர்ந்தோர் தேர்வெழுதும் நிலையில் தேர்வு மையம் அறிய கூகுள் மேப் அவசியமாகும் .
யூபிஎஸ்சி தேர்வு மையங்களில் மொபைல் போன் திருட்டு கொடுத்து தேர்வு மையங்களில் மன உலைச்சலுக்கு ஆளானோர்களும் உண்டு . இத்தகைய நிகழ்வுகளால் தேர்வு எழுதுவோர் மன உலைச்சலுக்கு ஆளாகி சிந்திக்கும் போக்கு சிதறுகின்றது .