நாளுக்கு நாள் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும், தற்போது இந்நோய்க் கிருமி காற்றில் பரவும் தண்மை கொண்டது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையே நீடித்து வருகிறது.
இந்நிலையில், இதுநாள் வரையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் தும்மும்போதும், இறுமும் போதும் வெளிப்படும் கிருமி காற்றில் சில அடி தூரம் சென்று விழும் நிலை இருந்த வந்தது.
ஆனால், தற்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கொரோனா நோய்க் கிருமி காற்றில் மிதந்து செல்லும் தன்மை கொண்டது என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட விஞ்ஞழனிகள், உலக சுகாதா நிறுவனத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கொரோனா கிருமி காற்றில் பரவாது என கூறிவந்த உலக சுகாதார அமைப்பு (WHO), கொரோனா காற்றில் பரவும் என்ற விஞ்ஞானிகளின் கருத்து குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.