மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கல்வித் துறைக்கு என 99 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய கல்விக்கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தாக்கல் செய்தார். அப்போது, கல்வித் துறைக்கு என எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது தொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
நடப்பு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திறன் மேம்பாட்டிற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளி வர்த்தகத்தை ஈர்க்கும் வகையில் கல்வித் துறையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.
அஅதோடு மட்டுமின்றி இளம் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். தேசிய காவல் பல்கலைக்கழகம் (National Police University), தேசிய தடவியல் பல்கலைக்கழகம் (National Forensic University) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
ஆசிரியர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சிறப்பு படிப்புகள் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.