புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மொத்தம் 40 பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. கிராஜுவேட் என்ஜினீயர் அப்ரண்டீஸ், டிப்ளமோ இன் என்ஜினீயரிங் டெக்னீஷியன் அப்ரண்டீஸ் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ, பி.இ., பி.டெக் ஆகிய ஏதாவது தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கலாம். ஊதியமாக ரூ.3,542-4,984/- என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
வேலை கௌஹாத்தியில் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும்.
DGM (A/HR), O/o the CGM Telecom., BSNL, Assam Telecom Circle, 3rd Floor, BSNL Bhawan, Panbazar, Guwahati-781001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 31 கடைசி நாளாகும்.