பிஎஸ்சி நர்சிங் படிக்கனுமா உங்களுக்கான நோட்டிஃபிகேசன் வந்துருச்சு விண்ணப்பிக்க தயாராகுங்க. மருத்துவப் பணி எவ்வளவு சிறந்ததோ அந்தளவிற்கு சிறந்தது நர்சிங் பணியாகும். இந்திய நர்ஸ்கள் வளைகுடா நாடுகளில் தேவை அதிகமாகும் . காரணம் இந்திய நர்ஸ்கள் மிகுந்த அற்பணிப்பும் பொருமையும் உடையவர்கள் ஆதலால் உலகளவில் இந்திய நர்ஸ்களின் தேவை அதிகரித்து காணப்படுவது இயல்பாகும் .
இந்திய பெண்களின் 2017 படிப்புகளுக்கான பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி செவிதிறன் பேச்சு மொழி நோய் குறியியல் பட்டபடிப்பு / பிஎஸ்சி ரேடியா தொரபி டெக்னாலஜி,பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி , பிஆப்டம்,பிஓடி மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டை சேர்ந்தோர்கள் மட்டும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லுரிகள் உள்ளன காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 23 ஆம் நாள் வரை மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து கொடுக்கலாம் . தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள் இந்திய குடியுரமை கொண்ட மாணவர்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் இணைந்து கொள்ளலாம் .
விண்ணப்பங்களில் சரியான விவரங்களை பூர்த்தி செய்து மாணவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி தேர்வு குழு, மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் , கீழ்ப்பாக்கம் சென்னை -10 அலுவலகத்தில் வழங்க்ப்படவுள்ளது. விண்ணப்ப கட்டணங்கள் ரூபாய் 400 கேட்பு வரைவோலை இணைத்துகொடுத்து அதன் பேரில் விண்ணப்பம் பெறலாம் . வரைவோலைக்கான எதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் செயலாளர் தேர்வு குழு , கீழ்ப்பாக்கம் , சென்னை 10 என்ற முகவரிக்கு எடுத்து அனுப்பவும் .
சார்ந்த பதிவுகள் :
எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் நர்சிங் படித்தவர்களுக்கு 1411 வேலைவாய்ப்புகள்.. விண்ணப்பிக்க ரெடியா?