புளுவேல் என்ற அரக்க விளையாட்டின் கோரத்தனத்தால் மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது நாம் அறிந்ததே ஆகும் . இந்திய அளவில் அதனை விளையாட்டை விளையாட வேண்டாம் என்று நாம் அதன் விபரிதம் குறித்து அறிவித்து மாணவர்களை நாம் எவ்வளவுதான மாணவர்களுக்கு எடுத்துகூரினாலும் மாணவர்களின் போக்கென்னமோ மாறுவதுபோல் இல்லை.
சமிபத்தில் கர்நாடக மாநிலத்தில் புளுவேல் கேம் விளையாடிய ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் திமிங்களங்களை வரைந்து இருந்தது சந்தேகத்தையும் அதிர்ச்சியும் ஏற்ப்படுத்தியது . சமிபத்தில் மாணவர்கள் 14 மாணவர்கள் பங்குகொண்ட இந்த விளையாட்டின் விபரிதம் குறித்து அறிந்துகொள்ளவே பலர் இவ்விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.
புளுவேல் விளையாட்டினால் கேரள மாணவர்கள் தூக்கிட்டு கொண்டது என இதுவரை 3000 பேர் இறந்துள்ளனர் . இந்த அரக்க விளையாட்டை குறித்து நமது முன்னோர்கள் குறிப்பில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது . தன்னைத்தானே மாய்க்க வைக்கும் அரக்க விளையாட்டு இரஷ்யாவை சேர்ந்தது .
50 இலக்குகளை கொண்ட இந்த விளையாட்டை தடுத்த நிறுத்த வழக்கும் போடப்பட்டுள்ளது . அரசு இந்த விளையாட்டை தடைசெய்துள்ளது .மேலும் சமுக வலைதலைகளில் இவ்விளையாட்டு குறித்து எந்த தூண்டுதல் கொடுக்காமல் இருக்க அரசு உத்திரவிட்டுள்ளது . அரசு பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது .
முல்லைமுல்லால எடுப்போம் :
இந்த விளையாட்டிலிருந்து இளைஞர்கள் மாணவர்களை காக்க நமது திறன் படைத்த இளைஞர்கள் புதுவித விளையாட்டு ஒன்றை உருவாக்க வேண்டும்.
அந்த விளையாட்டுக்கு மரம் நடுதல் , சேமித்தல், உதவுதல், சுற்றுப்புரத்தை தூய்மை படுத்துதல், பெற்றோர்களுடன் சேர்ந்து நேரம் செலவிடுதல், மத்திய மாநில அரசின் திட்டங்களை கேள்வி கேட்டல் அத்துடன் பாராளுமன்ற நடவடிக்கைகளை கவனித்தல் , விளையாட்டில் தங்கம் பெறல், போன்ற நேர்மறையான இலக்குகளை கொண்ட விளையாட்டை உருவாக்கி இளைஞர்கள் மற்றும் மாணவர்களை காக்கலாம் . இதுபோன்று சிந்தனை செய்வோம் உலகை அழிக்கவோ அதனை மாற்றவோ யாராலும் இயலாது . படைக்கும் இயற்கையை தவிர நம்மை அச்சுறுத்தும் சக்திகள் இங்கில்லை .
உலக கணினிகளை இயக்கும் இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு சவாலாகும். புளுவேலை விளையாட்டை மிஞ்சும் அளவிற்கு நேர்மறை சிந்தனை கொண்டவர்களுக்கான சவால்!!!,,,, என்ன கிளம்ம்பீட்டிங்களா இந்தியன் கேமுக்கு .....
சார்ந்த பதிவுகள்:
மாணவர்கள் கணினி செயல்பாட்டை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனிக்க அறிவுரை