நல்ல ஆசிரியர்கள் விருது வழங்கும் முறையில் மாற்றம் கொண்டுவரத்திட்டம் .
நல்ல ஆசிரியர்கள் தமிழகமெங்கும் அதிகரித்துள்ள நிலையில் விருதுமீது எந்த பிடிப்புமுன்றி ஆசிரியர்கள் விருது பெற முன் வருவதில்லை. ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்வு மற்றும் பள்ளிகல்வித்துறைக்கு ஆற்றும் சிறந்த பணியை அங்கிகரிக்க வேண்டும் . ஆனால் திறமை மிகுந்த ஆசிரியர்கள் அதனை பொருட்ப்டுத்துவதில்லை.

ஒரு தனிப்ப்ட்ட குழு மட்டும் பெயரை பரிந்துரைத்து பரிசு பெறுகின்றனர். ஒரு சிலருக்கு விருது பெறும் வழிமுறையும் தெரிவதில்லை. இத்தகைய வழிமுறையை மாற்ற திட்டமிட்டு வருகின்றது பள்ளிகல்வித்துறை.

திறமையான ஆசிரியரை அறிய மாணவர்களை அணுக வேண்டும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஆசிரியர்கள் குறித்து எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும் . அவ்வாறு செய்யும்பொழுது ஆசிரியர்கள் நிலைப்பாடு தெரிவதுடன் மாணவர்கள் ஆசிரியர்களிடம் எதிர்ப்பார்க்கும் குணநலன் அறிந்து கொள்ளலாம். மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் நல் இணக்கம் மலரும் . இதனை பள்ளி கல்வித்துறை செயல் படுத்தினால் மாணவர்கள் ஆசிரியர்கள் உறவு மேம்படும் . நல்ல கல்வி சூழல் பெருகும் . நல்ல கல்வி சூழல் பெருகும் போது மாணவர்கள் முன்னேற்றம் பெருகும் வருங்காலம் வெற்றி கரமாக அமையும் .


Click it and Unblock the Notifications












