சென்னை: பெருமைமிகு பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்(பெல்) டிப்ளமோ படித்தவர்களுக்காக ஒரு வருட அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனம்தான் பெல்.
டிப்ளமோ முடித்த மாணவர்களுக்காk ஒரு வருட அப்ரண்டீஸ் பயிற்சியை பெல் நிறுவனம் வழங்குகிறு. இதற்காக தேர்வையும் அந்நிறுவனம் நடத்தவுள்ளது. இதற்காக தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெல் நிறுவனம் வரவேற்றுள்ளது.
01.01.2013க்கு பிறகு டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 01.07.2015 தேதியின்படி அவர்களது வயது 23க்குள் இருக்க வேண்டும். பயிற்சியின்போது மாதம் ரூ.3,550 உதவித்தொகையாக பயிற்சியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி விவரம்: எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 06.07.2015 அன்று பகல் 12.30 மணிக்கு தேர்வு நடைபெறும்.
இதேபோல கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 07.07.2015 அன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறும்.
எலக்ட்ரிக்கல், கமர்ஷியல் பிராக்டிஸ் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 08.07.2015 தேதி பகல் 12.30 மணிக்கு நடைபெறும்.
Centre for Learning & Development, Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore - 560013 என்ற முகவரியில் தேர்வுகள் நடைபெறும்.