சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) துணை என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்கள் காத்திருக்கின்றன.
இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் 2016-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
மத்திய பாதுகாப்புத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது பெல் நிறுவனம். இதன் தலைமையகம் பெங்களூரில் அமைந்துள்ளது. நாடு முழுவதும் 9 தொழிற்சாலைகளையும், பல்வேறு இடங்களில் அலுவலகங்களையும் கொண்டுள்ளது.
துணை என்ஜினீயர்(மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், சிவில், எலக்ட்ரிக்கல்), சீனியர் என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஓபிசி பிரிவினருக்கு இந்த விண்ணப்பங்கள் ரூ.500-க்குக் கிடைக்கும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாதும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை உள்ளிட்ட பல்வேறு விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான bel-india.com -ல் காணலாம்.