பிஏட் கலந்தாய்வில் 118 மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர் . சென்னை சீமாட்டி கல்வியியல் கல்லுரியில் இரண்டாம் ஆண்டு பிஏட் படிப்பில் சேர ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்த காலை 9 மணி முதல் தொடங்கி செயல் பட்டு வருகின்றது .
முதல் நாள் கலந்தாய்வுக்கு பார்வை குறையுடையோர் 35 பேரும் , மாற்று திறனாளிகள் 83 பேர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் வாரிசு 21 பேர் அத்துடன் பழங்குடியினர் பிரிவு 18 பேர் உட்பட மொத்தம் 157 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் பார்வை குறையுடையோர் 31 பேர் மற்றும் மாற்று திறனாளிகல் 53 பேர் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் வாரிசுகள் 19 பேர் மற்றும் பழங்குடியினர் 15 பேர் என மொத்தம் 118 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டு சேர்க்கை கடிதங்களை பெற்றுகொண்டனர். பிஏட் இரண்டாம் ஆண்டுக்கான கவுன்சிலிங் வரும் சனிக்கிழமை வரை நடைபெறும் .
பிஏட் படிப்புகளுக்கான கலந்தாய்வின் இறுதியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது . இதில் விண்ணப்பித்தவர்கள் முன்னுரிமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்தடுத்து பிரிவில் சேர்க்கைக்கு அழைக்கப்படுவார்கள் .
சார்ந்த பதிவுகள் :
இரண்டாண்டு பிஏட் படிப்பிற்கான விண்ணப்பிக்க ஜூலை 3ஆம் தேதி இறுதி தேதியாகும் .
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு.. இன்று!