தமிழ்நாடில் பிஆர்க் மாணவர்கள் படிக்கும் மாணவர்கள் இணைய தளத்தில் விண்ணபிக்க இயலாமல் மிகுந்த சிக்கலில் இருக்கின்றனர். பிஆர்க் இணையத்தளம் மாயம் விண்ணப்பித்த மாணவர்கள் ஸ்தம்பிப்பு நிலையில் இருக்கின்றனர்.
அண்ணா பல்கலைகழகங்களில் 53 கல்லுரிகளில் 2760 பிஆர்க் இடங்கள் உள்ளன. கவுன்சிலிங் மூலம் மாணவர்களுக்கான இடங்கள் நிரப்பபடுகின்றனர். பிஆர்க படிக்கும் மாணவர்கள் barc.tnea.ac.in இணையத்தளத்தில் ஜூன் 25 முதல் ஜூலை 6 வரை கல்லுரி விவரங்கள், கட்டணம், மற்றும் கல்லுரி முதல்வர்கள் விவரம் அனைத்தும் இருந்தன .
மாணவர்களுக்கான ரேண்டம் என் வெளியிடப்பட்டது . ஆனால் இது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை . மாணவர்கள் இணையத் தளத்தில் தேடினால் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை ஆனால் மாணவர்களின் இஞ்சினியரிங் கட் ஆஃப் தகவல்கள் மட்டும் கிடைக்கின்றன.
பிஆர்க் படிப்புகளுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங்கும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கும் வேறு முறையால் நடப்பதால் அதற்காக தனித்தனி இணையத்தளம் உருவாக்கியிருந்தனர்.
கவுன்சிலிங்கிற்கு எந்த இணையத் தளத்தில் வின்ணப்பித்தோமோ அந்த இணையத்தளம் வாயிலாக கவுன்சிலிங் முடியும் வரை பின்ப்பற்ற வேண்டும் . மாணவர்கள் கல்லுரியில் சேர்க்கை முடிந்தப்பின்பும் அந்த தளத்தில் சில தகவல்களை பாதுகாக்க வேண்டும் . அண்ணா பல்கலைகழகத்தின் கணினி ஆசிரியர் குழுவே கவுன்சிலிங் தொடர்பான மேம்பாடு நடத்தும் ஆனால் தற்பொழுது பிஆர்க் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தளம் முடக்கப்ப்ட்டதால் மாணவர்கள் செய்வது அறியாது குழம்பியுள்ளனர் .
சார்ந்த பதிவுகள்:
பிஆர்கிடெக்சர் மாணவர்கள் சேர்க்கைக்கு ஜேஇஇ தேர்வு இணைக்க பெற்றோர்கள் கோரிக்கை
பிஆர்க் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைகழகத்தின் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும்
பிஆர்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் ஜேஇஇ புறக்கணிப்பட்டுள்ளது