சென்னை : பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள புரபேஷனரி ஆபிஸர் பணிக்கு நாடுமுழுவதும் உள்ள காலிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 1 மே 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

வேலையின் தன்மை -
புரபேஷனரி ஆபிஸர்
கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வேலை இடம் - இந்தியா முழுவதும்
கல்வித் தகுதி -
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பயின்றிருக்க வேண்டும். அதில் 55% மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். (எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50% மார்க் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்)
வயது வரம்பு -
20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (02.04.1989க்கு பின் பிறந்தவர்கள் மற்றும் 01.04.1997க்கு முன் பிறந்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்)
தேர்ந்தெடுக்கப்படும் முறை -
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு முறை - எழுத்துத்தேர்வு 2மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும்.
ரீசனிங் - 50 கேள்வி (50 மார்க்)
அளவு - 50 கேள்வி (50 மார்க்)
பொது விழிப்புணர்வு (வங்கி தொழில் தொடர்பான) - 50 கேள்வி (50 மார்க்)
ஆங்கில மொழி - 50 கேள்வி (50 மார்க்) மொத்தம் 200 கேள்விகள் 200 மார்க்குகளுக்கு கேட்கப்படும். இதற்கு இரண்டு மணி நேரம் கொடுக்கப்படுகிறது.
விளக்கமான வகை - (டிஸ்கிரிப்டிவ் பேப்பர் 30 நிமிடம் நடைபெறும்)
ஆங்கிலம் மொழியில் - 2 கேள்வி (50 மார்க்) கேட்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் - ரூ. 750/- பொதுப்பிரிவினரிடம் வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
முக்கிய தேதிகள் -
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் - ஏப்ரல் 1ல் இருந்து மே 1ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுச்சீட்டு - 12.05.2017 தேதி ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் நாள் - 27 மே 2017 எழுத்துத் தேர்வு நடைபெறும்.
மேலும் தகவல்களுக்கு இணைதள முகவரியை அனுகவும்.


Click it and Unblock the Notifications












