தமிழகத்தில் கால்நடைத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் இந்தப் பணியிடங்களுக்காகக் காத்திருந்த தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளுக்கு தேவையான வசதிகளை அரசு சிறந்த முறையில் செய்து கொடுத்து வருகிறது.அண்மையில் ஒரே நேரத்தில் 1,400 பணியிடங்களையும் அரசு நிரப்பியது. இதனிடையே, ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ. 13 கோடி செலவில் மரபுவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கருவிகளை அரசு அமைத்து கொடுத்துள்ளது.

இதன் மூலமாக கால்நடைகளுக்கு சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. இது போன்ற ஏகப்பட்ட நடவடிக்கையினை அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், கால்நடை மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை முடிவுக்கு வர இருக்கிறது.இதனால், காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மீன் வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்தத் துறை பணிக்காகக் காத்திருந்த தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான அறிவிப்புக்காக அவர்கள் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications












