சென்னை குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு வரும் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு துறையில் குரூப்-4 பதவிகளில் 9,351 காலி இடங்களுக்கு தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான டிஎன்பிஎஸ்சி தேர்வானது பிப்ரவரி 11 ஆம் நாள் நடைபெறுகின்றது.
அரசுதுறைகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு நவம்பர் 14 ஆம் நாள் துவங்கி டிசம்பர் 13 ஆம் நாள் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பதிவுக்கான அவகாசம் வரும் 20 வரையும் தேர்வு கட்டணம் செலுத்துவது 21 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார் . நேறு வரை இத்தேர்வுக்கு 18.33 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதுவரை குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பத்தவர்களில் இதுவே அதிகபட்சம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பங்கள் அதி அளவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் . தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது .
டிஎன்பிஎஸ்சியின் போட்ட்டி தேர்வுக்கான இந்த விண்ணப்ப அறிவிப்பு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு நல்ல வாய்ப்பாகும். ஆகியால இதனை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்க மறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இம்முறை சரியாக பயன்படுத்தி விண்ணப்பியுங்கள் மீண்டும் ஒருமுரை வாய்ப்புகள் கிடைக்காது .
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












