சென்னை: பியூசி மாணவர்களுக்கு உதவுவதற்காக புதிய மொபைல்போன் ஆப்-ஐ கர்நாடக மாநில அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் பியூசி முறை ஒழிக்கப்பட்டு பிளஸ்-1, பிளஸ்-2 கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால் கர்நாடகாவில் இன்னும் பியூசி கல்வி முறை உள்ளது. 10-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் நேரடியாக பியூசி கல்லூரிகளுக்குச் சென்று பயின்று வருகின்றனர்.
அந்த பியூசி மாணவர்களுக்கு உதவுவதற்காக புதிய செல்போன் ஆப்-ஐ கர்நாடகா அறஇமுகம் செய்துள்ளது. Deeksha PAL என்ற இந்த புதிய ஆப் ஆன்ட்ராய்ட் வகை செல்போன்களுக்கானதாகும். இந்த ஆப் மூலம் பியூசி தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களைப் பயில முடியும்.
தேர்வுக்குத் தயாராவது எப்படி, பாடங்கள் பயில்வதற்கு எளிய முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த ஆப்-ல் உள்ளன. குறிப்பாக பியூசி 2-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இது உதவுகிறது.
கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு இந்த ஆப் கிடைக்கிறது. மேலும் அறிவியல் பாடமும் இதில் இடம்பெற்றுள்ளது.
தேர்வுக்கான வினாத்தாளைத் தேர்வு செய்யும் ஆசிரியர் குழு இந்த மொபைல்போன் ஆப்-ஐ உருவாக்கியுள்ளது.