அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் அனைத்துப் படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகம், நிறைவு செய்த விண்ணப்பங்கள் வந்து சேருவதற்கான கடைசி நாள் வருகிற நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளவும், நேரடி சேர்க்கைக்கும் அருகே உள்ள தொலைதூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களை அனைத்து நாட்களிலும் தொடர்புகொள்ளலாம்.
படிப்பு மையம் மற்றும் சேர்க்கை குறித்த மேலும் விபரங்களை அறிய 04144 - 238043, 238044, 238045, 238046, 238047, 238610 ஆகிய உதவி மைய எண்களைத் தொடர்புகொள்ளலாம். அல்லது [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இதில் சேர விரும்புவோர் www.audde.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.