தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத் தோ்வு தேதிகள் மாற்றி திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் அனைத்தும் 2020 ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேப் போல டிசம்பா் 30-ஆம் தேதியன்று நடக்கவிருந்த தோ்வுகள் அனைத்தும் 2020 ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
For Quick Alerts
For Daily Alerts
English summary
Anna University Semester Exam Postponed For TN Local Body Election
Story first published: Thursday, December 19, 2019, 11:02 [IST]