தமிழகத்தில் சென்னையிலுள்ள அனைத்து கல்லுரிகளும் நாக் மதிப்பீட்டின் கீழ் இருக்க வேண்டும் . நாக் தர மதிப்பீடு பெற்றிருக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது .
கல்லுரியின் தரம் , அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் திறன் வளர்ப்பு தொடர்பான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும் . 1947 களில் 20 பல்கலைகழகமும் 400 கல்லுரிகள் இருந்தன ஆனால் இன்று 800 பல்கலைகழகங்களும் 40,000 கல்லுரிகளும் நாடு முழுவது பரந்து விரிந்து காணப்படுகிறது .
நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்த உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அரசு உயர்த்த வேண்டியுள்ளது . மேலும் நாட்டிலுள்ள கல்லுரிகளின் தரம் நாக் மதிப்பீட்டின் கீழ் வரும்போது எளிதாக தரம் பிரித்து அறிவிக்கப்படும். மாணவர்களும் நல்ல தரமான கல்லுரியில் இணைய இயலும் ஆகவே இது குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளவும் , இத்தகவல்கள் வெளியிடும் போது கல்லுரிகள் போட்டியிட்டு உள் கட்டமைப்பு வசதிகள் பெருக்கவும் நாக் குழுவின் மதிப்பீடு உதவியாக இருக்கும் எனவே நாக் கமிட்டியின் கீழ் தரமதிப்பீடு அனைத்து கல்லுரிகளும் பெற வேண்டியதன் அவசியம் ஆகின்றது .
ஒவ்வொரு கல்லுரியும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டி ஆராய்ச்சி மற்றும் செயல்முறை தேர்வுகளுக்கு முக்கியமளிக்க வேண்டும் . இதன் மூலம் கல்லுரிகளிலிருந்து வெளியேறும் மாணவர்களின் தரம் மற்றும் அவர்களின் அணுகுமுறை மேம்பட்டு இருக்கும்.
ஆகவே கல்லுரிகளின் தரத்தையும் மாணவர்களின் தரத்தையும் மேம்படுத்தவே இது உதவிகரமாக இருக்கும் என அனைத்து கல்வியியல் வல்லுநர்களாலும் நம்பபடுகிறது . எது எப்படியோ கல்லுரியின் பாடத்திட்டங்களில் மாற்றமும் கல்லுரிகளின் பாடம் எடுக்கும் போக்கும் மாற்றம் அடைய வேண்டும் . சலிப்புத் தன்மையற்ற புதுமையான செயல்முறை கல்விக்கு கல்லுரிகள் மாறும் போது மாணவர்களின் சிந்தனையும் அவர்களின் விருப்பங்களும் மாறுபடும் .
சார்ந்த பதிவுகள்:
நெட் தேர்வு எழுதுவோர்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக அறிவிக்க வேண்டும்
யுஜிசியின் 2017ஆம் ஆண்டிற்க்கான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது
மாணவர்களே.... உஷார்....! போலி பல்கலை.களின் பட்டியல் தயார்..!!
மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி தொகை