சென்னை : இந்திய விமான ஆணைய நிறுவனம் (ஏ.ஏ.ஐ) நிறுவனத்தின் தெற்கு மண்டல கிளைகளில் இளநிலை உதவியாளர் பணிக்கு 147 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுப் பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு 92 காலியிடமும், ஓபிசி விரிவினைச் சார்ந்தவர்களுக்கு 11 காலியிடமும், எஸ்சி பிரிவினருக்கு 23 காலிஇடமும், எஸ்டி பிரிவினருக்கு 21 காலியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு - பொதுப்பிரிவில் உள்ளவர்கள் 30வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி அத்துடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தீயணைப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் 50% மார்க்குள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதற்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும். மேலும் அதில் உங்கள் புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு, தேவையான சான்றுகளை சான்றொப்பம் செய்து 31.03.2017ம் தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தினை கீழ்க் கண்ட முகவரிக்குச் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.
இளநிலை உதவியாளர் (தீயணைப்பு வீரர்)
பிராந்திய நிர்வாக இயக்குனர்,
இந்திய விமான ஆணைய நிறுவனம்,
தெற்கு மண்டலம்,
சென்னை - 600027.
மேலும் தகவல் பெற www.aai.aero என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


Click it and Unblock the Notifications












