சென்னை: அகில இந்திய மருந்துவ நுழைவுத்தேர்வு(AIPMT-2015) முடிவுகள் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மீண்டும் நடத்தப்பட்டு இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 3-ம் தேதி AIPMT-2015 தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வு முறையில் முறைகேடு ஏற்பட்ட புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 47 பேர் மறுதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் சில தினங்களில் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டது போலவே பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் மருத்துவம்,பல் மருத்துவத்துக்கான மறுநுழைவுத்தேர்வு ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்டது.
இதற்கான தேர்வு முடிகள் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.