புதுடெல்லி: ஒருங்கிணைந்து சுகாதார நல மையங்களை அமைக்க பெங்களூரைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா யோகா அண்ட் அனுசந்தனா சமஸ்தானா (எஸ்-வியாசா) பல்கலைக்கழகத்துடன் டெல்லி ஏஐஐஎம்எஸ் (ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் சயின்ஸஸ்) ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
ஏஐஐஎம்எஸ்-ல் ஒருங்கிணைந்த சுகாதார நல மையம் அமைக்க, தொழில்நுட்ப உதவிகளை எஸ். வியாசாவிடம் கேட்டுள்ளது ஏஐஐஎம்எஸ்.
மேலும் அந்த மையத்தில் யோகா, இருதய நலம், உடலியல், புற்றுநோய் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும். இதனால் தொழில்நுட்ப உதவிகளை எஸ். வியாசா வழங்கவுள்ளது.
இதுகுறித்து ஏஐஐஎஸ் இயக்குநர் எம்.சி. மிஸ்ரா கூறியதாவது: இது ஏஐஐஎம்எஸ் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த அனைத்து சுகாதார நலன் வசதி கொண்டதாக இந்த மையம். இதற்காகவே நாங்கள் எஸ்-வியாசாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்றார் அவர்.