அக்டோபர் 15 1931 இந்தியாவின் மக்கள் குடியரசு தலைவர் ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம் பிறந்ததார் . இன்றோடு 86வது பிறந்த்தினம் கொண்டாடப்படுகிறது .

ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த தினம் அக்டோபர் 15 மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது . இந்தியாவின் ஏவுகணையின் தந்தை மற்றும் அறிவியலாளர் அத்துடன் நாட்டின் 11 வது இந்திய குடியரசு தலைவராக இருந்து நாடு முழுவதும் இலட்சக் கணக்கான மாணவர்களை சந்தித்து கனவுகளை விதைத்துள்ளார் .
தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தில் பிறந்து , திருச்சி புனித ஜோஸஃப் கல்லுரியில் இயற்பியல் பயின்று மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லுரியில் பொறியியல் பயின்றுள்ளார். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திலும் டிஆர்டிஒவிலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் இஸ்ரோவிலும் பணியாற்றியுள்ளார்.
1974 ஆம் ஆண்டு நடத்திய பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டு நடத்திய பொக்ரான் 2வில் மிகுந்த பங்காற்றியுள்ளார். இந்தியாவின் குடியரசு தலைவராக 2002 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு நாட்டின் இருபெரும் தேசிய கட்சிகளாக பாஜகா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றார் .
மாணவர்களின் வழிகாட்டி :
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று யுரோபியன் பாராளுமன்றத்தில் செவ்வாய மலர்ந்த அப்துல்கலாம் அவர்கள் 2002 முதல் 2007 வரை குடியரசு தலைவராக இருந்த காலத்தில் சிறந்த தலைவராக தவிர்க்க முடியாத தலைவராக இருந்தார் .
மாணவர்களிடம் தேசப்பற்று. பொதுநலம், கனவு காணுதல், நாட்டை 2020இல் வல்லரசாக்குதல் போன்ற கனவுகளை வித்தைத்தார் .
நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மாணவர்களை சந்தித்தார் முடியாது என்பது ஒரு நோய் என்ற கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார். லட்சியங்களை கன்வாக கொள்ள வேண்டும் அதனை நினைவாக்கும் வரை தொடர்ந்து முயற்ச்சி செய்ய வேண்டும் என்று எடுத்துறைத்துள்ளார்.அப்துல் கலாமின் பிறந்த நாளை தமிழ்நாட்டின் எழுச்சிநாளாக கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது .அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள் சுயசரிதை இந்திய இளைஞர்களுக்கு மாணவ்ர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது .
பொண்மொழிகள்:

ஒரு மோசமான ஆசிரியரிடம் இருந்து ஒரு நல்ல மாணவன் கற்றுக்கொள்வான்
இந்தியாவின் தலைவிதியை நிர்ண்யிக்க்கும் எதிராகாலத்தூண்கள் இன்றைய வகுப்பரை மாணவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான் ஆனால் ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி எண்ணி பெருமிதன் கொள்கிறான் .
இந்தியா 2020 , மிஷன் இந்தியா, இன்ஸ்பையரிங் தாட்ஸ் (ஊக்கப்படுத்தும் யோசனைகள்),
இத்தகைய பெருமைவாயந்த அபதுல்கலாம் அவர்கள் இறந்ததினம் ஜூலை 27 , 2015 ஆம் ஆண்டு இறந்தார் . மாணவர்கள் அவரை பின்ப்பற்றி வாழ்வில் முன்னேற்ற கனவை கைகொண்டு வெற்றி பெற வேண்டும் . இந்த தேசத்தை காத்துநின்று வளமாக்க வேண்டும் .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












