வேளாண்மைத் துறையில் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

வேளாண்மைத் துறையில் பணிபுரியும் காலத்திலேயே உயிரிழந்த 45 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களது கல்வித் தகுதி, பதவி மூப்பு அடிப்படையில் காவலர், அலுவலக உதவியாளர், கிடங்கு மேலாளர், இளநிலை தட்டச்சு உதவியாளர் உள்ளிட்ட பணிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு வாரிசுதாரர்களில் 7 பேருக்கான பணி உத்தரவினை முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
English summary
45 applicants given jobs on compassionate grounds: TN CM
Story first published: Friday, September 28, 2018, 11:19 [IST]


Click it and Unblock the Notifications












