10ம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல் மாணவிகளே அதிக தேர்ச்சி.! சமூக அறிவியலில் அதிக பேர் முழுமதிப்பெண்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. புதிய மாற்றங்கள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை : 10லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு புதிய மாற்றத்துடன் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல் மூன்று ரேங்க் மற்றும் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாது. கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

96.2% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
92.5% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்த தேர்ச்சி சதவீதம் 94.4%

10ம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல் மாணவிகளே அதிக தேர்ச்சி.! சமூக அறிவியலில் அதிக பேர் முழுமதிப்பெண்.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் முதல் இடம் பெற்றுள்ளது.

1557 பள்ளிகள் முழுத் தேர்ச்சி விழுக்காட்டினைப் பெற்றுள்ளது.

தமிழில் 69 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளார்கள். ஆங்கிலத்தில் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை. கணிதப்பாடத்தில் 13,759 பேர் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 17,481 பேர் முழுமதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 61, 115 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவினை தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி வருடம் மற்றும் மாதத்தினை பதிவு செய்து மதிப்பெண்களை கீழே உள்ள இணையதள முகவரியில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10th public exam results released today. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in Go to websites and check out the results.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X