சென்னை : தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. விருது நகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடம் பிடித்துள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த வருடம் கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதம் 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. 1557 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன.
விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தையும் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளன.
மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதப் பட்டியல்
தமிழ்நாட்டில் முதலிடத்தை விருது நகர் மாவட்டம் பெற்றது- 98.55% தேர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் 2-வது இடம்- 98.17% தேர்ச்சி
இராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடம்- 98.16% தேர்ச்சி
ஈரோடு மாவட்டம் 4-வது இடம்- 97.97% தேர்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் 5-வது இடம்- 97.16% தேர்ச்சி
தேனி மாவட்டம் 6-வது இடம்- 97.10% தேர்ச்சி
திருப்பூர் மாவட்டம் 7-வது இடம்- 97.06% தேர்ச்சி
சிவகங்கை மாவட்டம் 8-வது இடம்- 97.02% தேர்ச்சி
திருச்சி மாவட்டம் 9-வது இடம்- 96.98% தேர்ச்சி
நாமக்கல் மாவட்டம் 10-வது இடம்- 96.54% தேர்ச்சி
கோவை மாவட்டம் 11-வது இடம்- 92.46% தேர்ச்சி
நெல்லை மாவட்டம் 12-வது இடம்- 96.35% தேர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் 13-வது இடம்- 96.16% தேர்ச்சி
தஞ்சை மாவட்டம் 14-வது இடம்- 95.21% தேர்ச்சி
கரூர் மாவட்டம் 15-வது இடம்- 95.20% தேர்ச்சி
நீலகிரி மாவட்டம் 16-வது இடம்- 95.09% தேர்ச்சி
பெரம்பலூர் மாவட்டம் 17-வது இடம்- 94.98% தேர்ச்சி
மதுரை மாவட்டம் 18-வது இடம்- 94.63% தேர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் 19-வது இடம்- 94.44% தேர்ச்சி
தருமபுரி மாவட்டம் 20-வது இடம்- 94.25% தேர்ச்சி
சேலம் மாவட்டம் 21-வது இடம்- 94.07% தேர்ச்சி
கடலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. கடலூரில் 88.77% தேர்ச்சி விகிதம்