இந்தண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய வேண்டியதில்லை. இன்று முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை பிளஸ்2 மற்றும் 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்கள் படிப்பு விவரங்களை பதிவு செய்ய பள்ளியிலேயே அனைத்து வசதிகளையும் அரசு செய்து வைத்துள்ளது . மாணவர்கள் தங்கள் பள்ளியிலே இணையதள முகவரியில் தேவைப்படும் விவரங்களை பதிந்து வேலைவாய்ப்பு பதிவு அட்டையை பெறலாம் . மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுஅட்டை பெறும் முறையை தமிழக அரசு 2011 முதல் வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பு பதிவு இணையத்தளம் www.tnvelaivaaippu.gov.in மூலம் பதிவு செய்யலாம்.
வேலைவாய்ப்பு அட்டையை மாணவர்கள் பெற்றுகொள்ள தேவையில்லா அலைச்சல் மற்றும் காத்துகிடப்பு ஆகியவற்றை தவிர்த்து மாணவர்கள் எளிதில் அனைத்தையும் பெற்றுகொள்ள அரசு சில வேலைவாய்ப்பு அலுவலக சிரமங்களை தவிர்த்து மாணவர்கள் நேரடியாக பள்ளியிலேயே சாதிசான்றிதழ், ஆதார் எண், மதிப்பெண் பட்டியல், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் . பத்தாம் வகுப்பு பிளஸ்2 முடித்த மாணவர்கள் பதிவு எண்அட்டையை பாதுகாக்க வேண்டும் .
இணையத்தில் வேலைவாய்ப்பு பதிவு அலுவலக எண் பெற்று கொள்ளவும். வேலை வாய்ப்பு பதிவு எண் பெறாதவர்கள் நேரடியாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெறலாம் . தனியார் சிபிஎஸ்சி, அரசு உதவி பெறும் அனைத்து பள்ளி மாணவர்களும் இச்சேவையை பயன்படுத்தி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் .