8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை!

புழல் மத்திய சிறைச்சாலையில் பெண்கள் தனிச் சிறையில் காலியாக உள்ள பெண் செவிலி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Saba

புழல் மத்திய சிறைச்சாலையில் பெண்கள் தனிச் சிறையில் காலியாக உள்ள பெண் செவிலி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர். சீதாலட்சுமி வெளியிட்டுள்ளார். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் புழல் சிறையில் பெண்களுக்கு மட்டும் வேலை!

பணியிடம் : புழல் மத்திய சிறைச்சாலை, சென்னை

பணி : பெண் செவிலி உதவியாளர்

கல்வித் தகுதி :

குறைந்தபட்சம் எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் பெண்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது 35 இருக்கலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். முற்பட்ட வகுப்பினர் 30 வயதுக்குள் உட்பட்டவராக இருப்பது அவசியம்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் குடும்ப அட்டை, முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் புகைப்படத்தையும் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

சிறை கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, புழல் , சென்னை - 66

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
women candidates invited for nurse assistant post in chennai puzhal jail
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X