திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர், தொழில் வல்லுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு உதவித் தொகையாக ரூ.31 ஆயிரம் முதல் ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
Junior Research Fellow
திட்டத்தின் பெயர் : DST - SERB funded project entitled "A whole genome based reduced representation approach for identification of seedless phenotype in banana (Musa spp.)
காலிப் பணியிடம் : 01
உதவித் தொகை : இந்த பயிற்சிப் பணியிடத்திற்கு உதவித் தொகையாக மாதம் ரூ.31,000 வழங்கப்படும். மேலும், இது தவிர இதர படிகளும் உண்டு.
கல்வித் தகுதி : உயிர் தகவல்வியல், உயிர் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருப்பதோடு, நெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இளநிலை தொழில் வல்லுநர்
காலிப் பணியிடம் : 01
ஊதியம் : மாதம் ரூ.15,000
கல்வித் தகுதி : உயிர் தகவியல், உயிர் தொழில்நுட்பம், பிளாண்ட் பிரீடிங் மற்றும் ஜெனட்டிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் தேதி : 2020 ஜனவரி 09
அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nrcb.res.in/ என்னும் லிங்க்கை காணவும். அல்லது நேரடியாக அறிவிப்பு குறிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












