தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் (VOC) காலியாக உள்ள Mechanic, Electrician, Fitter உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகம் (VOC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Mechanic, Electrician, Fitter, Welder மற்றும் Draughtsman பணிகளுக்கு என மொத்தம் 14 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
- Mechanic, Electrician, Fitter, Welder, Draughtsman - 10-வது தேர்ச்சி பெற்று பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- PASAA (Programming and System Administration Assistant) - 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவித் தொகை : ரூ.6,500 முதல் அதிகபட்சம் ரூ.7,350 வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief Mechanical Engineer, V.O.Chidambaranar Port Trust, Tuticorin-628004.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.vocport.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.