விருதுநகர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 64 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : விருதுநகர் கூட்டுறவு வங்கி
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 64
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- உதவியாளர் / எழுத்தர் - 34
- உதவியாளர் - 30
கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.
- இதர வகுப்பு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறும். குறைந்தது ரூ.15,000 முதல் ரூ.62,000 வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.vnrdrb.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.vnrdrb.net/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.