விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 5 மற்றும் 10-வது தேர்ச்சியடைந்தவர்கள் தகுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 52
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- அலுவலக உதவியாளர் : 30
- பதிவறை எழுத்தர் : 08
- இரவுக் காவலர் : 11
- துப்புரவாளர் : 03
கல்வித் தகுதி :
அலுவலக உதவியாளர் : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர் : 10-வது தேர்ச்சி
இரவுக் காவலர் : 5-வது தேர்ச்சி
துப்புரவாளர் : 5-வது தேர்ச்சி
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/viluppuram என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.03.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification - CJM Court.pdf அல்லது https://districts.ecourts.gov.in/viluppuram என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












