தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 1234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிராம சுகாதார அலுவலகங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கு, தமிழக அரசு மற்றும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வொய்ப், மல்ட்டி பர்ப்பஸ் ஹெல்த் வொர்க்கர் சான்றிதழ் பிடிப்பில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தகுதியும், விருப்பமும் உள்ள விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள், தங்களது கல்வித்தகுதியை உறுதிப்படுத்திக்கொள்ள அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநரை வருகிற 24-ஆம் தேதி சந்திக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.