மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான விஜயா வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம், 421 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 14ம் தேதியே (நாளை) கடைசி நாளாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : விஜயா வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 421
பணி : அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட மாநிலங்களின் அலுவலக மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.150
- மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50
விண்ணப்பிக்கும் முறை : http://www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.vijayabank.com/Careers/Careers-List என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.