தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் (TN MRB) அரசு மருத்துவ மனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்று செவிலியர் துறை படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : வேலூர்
மொத்த காலிப் பணியிடம் : 1234
(மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் அறிவிக்கப்பட்ட கிராம சுகாதார செவிலியர் 1234 பணிக் காலியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு நிரப்பப்பட உள்ளது.)
கல்வித் தகுதி :
10, அல்லது 12-வது தேர்ச்சி பெற்று செவிலியர் துறையில் Auxiliary Nurse Midwifery in Nursing (ANM) பயின்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் உடையவர்கள் தங்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வேலூர் அவர்களை தொடர்புகொள்ள வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய https://vellore.nic.in/ அல்லது https://vellore.nic.in/notice_category/recruitment/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29/11/2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.