தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் காலியாக உள்ள பாதுகாவலர், சமையலர், உதவியாளர், உளவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அரசினர் பாதுகாப்பு இல்லம் (வேலூர்)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 20
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
- பாதுகாவலர் - 12
- சமையலர் - 02
- காவலர் - 02
- உடனாள் - 01
- உடற்கல்வி ஆசிரியர் - 01
- உளவியலாளர் - 01
- தொழிற்பயிற்றாசிரியர் (வாத்தியம்) - 01
பணி மற்றும் இதர விபரங்கள்:-
பணி : பாதுகாவலர் - 12
சம்பளம் : ரூ.12,000
வயது வரம்பு : 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி : சமையலர் - 02
சம்பளம் : ரூ.10,000
வயதுவரம்பு : 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 8 ஆம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
பணி : காவலர் - 02
சம்பளம் : ரூ.10,000
வயதுவரம்பு : 18 வயது பூர்த்தியடைந்து 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தகுதி : தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி : உதவியாளர் - 01
சம்பளம் : ரூ.8,000
வயதுவரம்பு : 18 வயது பூர்த்தியடைந்து 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தகுதி : தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பதவி : உடற்கல்வி ஆசிரியர் - 01
சம்பளம் : ரூ.15,000
வயதுவரம்பு : 35 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : உடற்கல்வி ஆசிரியர் சான்று (உயர்நிலை) பெற்றிருக்க வேண்டும்.
பதவி : உளவியலாளர் - 01
சம்பளம் : ரூ.15,000
வயதுவரம்பு : 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : இளங்கலை அல்லது உளவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி : தொழிற்பயிற்றாசிரியர் (வாத்தியம்) - 01
சம்பளம் : ரூ.15,000
வயதுவரம்பு : 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இசைக்குழுவினர் பயன்படுத்தும் இசை மொழியினை அறிந்திருத்தல் வேண்டும்.
- ஏதேனும் ஒரு வாத்தியக் கருவி வாசிப்பதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : https://vellore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு.
அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில்,
வேலூர் - 632001,
வேலூர் மாவட்டம்.
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி : 20.02.2019 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/02/2019020792.pdf அல்லது https://vellore.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.