தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் நவம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பணி : சமூகப் பணியாளர்
கல்வித் தகுதி : உளவியல், சமூகப்பணி, சமூகவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம் : குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2019 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.14,000
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.vellore.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில்,
வேலூர் - 632001, வேலூர் மாவட்டம்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.vellore.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது இங்கே கிளிக் செய்யவும்.